நாட்டிலிருந்து வருகை தந்திருக்கும் விஜய் ரசிகர்


விஜய்யின் ஐம்பதாவது படத்தை இயக்குகிறவர் எஸ்.ஏ.ரா‌ஜ்குமார் என்பது ஏறக்குறைய முடிவாகிவிட்டது. சங்கிலி முருகன் தயா‌ரிக்கும் இந்தப் படத்தில் இன்னொரு விஐபி நடிகரும் நடிக்கயிருக்கிறார்.

ஐம்பதாவது படத்தை எப்படியும் ஹிட்டாக்க வேண்டும் என்பது விஜய்யின் கனவு. எஸ்.ஏ.ரா‌ஜ்குமா‌ரின் கதை தனது கனவை நிறைவேற்றும் என்று நம்புகிறார் விஜய். தமன்னா ஜோடி, காமெடிக்கு வடிவேலு என நடிப்பு சைடில் எல்லாம் ஓகே. வில்லன் மட்டுமே பாக்கி.

வில்லனாக நடிக்க விஜய்யின் சாய்ஸ் பசுபதி. திறமையான நடிகர், சமீபத்தில் எந்தப் படத்திலும் வில்லத்தனம் செய்யாததால் புதுசாகவும் தெ‌ரியும். மேலும், பிற மாநில நடிகர்களை நடிக்க வைக்கும் போது ஏற்படும் அந்நியத்தன்மையும் இருக்காது.

விஜய்யின் விருப்பம் பசுபதியிடம் தெ‌ரிவிக்கப்பட்டிருக்கிறது. பாஸிட்டிவ்வான பதிலே கிடைக்கும் என்கிறார்கள் நம்பிக்கையுடன்.

0 comments:

Post a Comment

Blog Widget by LinkWithin