நாட்டிலிருந்து வருகை தந்திருக்கும் விஜய் ரசிகர்



கடைசியாக வெளியான வில்லு, குருவி இரண்டும் சுமார் படங்கள். 49 வது படமான வேட்டைக்காரனை எப்படியாவது ஓட்டியாக வேண்டும்.
விஜய் அடிக்கும் அரசியல் ஸ்டண்ட் கூட வேட்டைக்காரனை ஓட வைக்க‌த்தான் என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கும் அளவுக்கு வேட்டைக்காரன் வெற்றி அவருக்கு தேவைப்படுகிறது. கும்பிட போன தெய்வம் பைபாஸில் குறுக்கே வந்த மாதி‌‌‌‌ரி வேட்டைக்காரன் வெற்றிக்கு ஒரு வழி பிறந்திருக்கிறது. படத்தின் தயா‌‌‌‌ரிப்பாளர் சன் பிக்சர்சுக்கு படத்தை விற்றிருக்கிறார்.

சுமார் படங்களையே அபி‌‌‌‌ரிதமான விளம்பரத்தால் சூப்பர் ஹிட்டாக்கி பலரது வயிற்றில் அமிலத்தை அள்ளி தெ‌ளித்து வருகிறது சன் பிக்சர்ஸ். இவர்கள் வாங்கிய அயன் கண்டபடி ஓடி கலெக்ஷனில் சாதனைப் படைத்தது தெ‌ரியும். இப்போது வேட்டைக்காரனையும் இவர்களே வாங்கியிருக்கிறார்கள். எப்படி விளம்பரம் செய்வார்கள் என கற்பனை செய்வதே கடினம்.

சன் வேட்டைக்காரனை வாங்கியதால் படம் எப்படியும் ஓடிவிடும் என்ற தெம்பு விஜய்க்கு ஏற்பட்டிருக்கிறது. அவருக்கு ஏற்பட்டிருக்கிறதோ இல்லையோ, அவரது ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.








காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தியுடன் நடிகர் விஜய் சந்தித்து பல மணி நேரம் உரையாடினார். தமிழ்நாட்டில் இளைஞர்காங்கிரசை வலுப்படுத்தும் நோக்கத்தில் ராகுல்காந்தியின் உத்தரவுப்பட இளைஞர்காங்கிரஸ் உறுப்பினர்கள் சேர்ப்புப்பணியில் தமிழக காங்கிரஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

அதே நேரம் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் நடிகர் விஜய் தமிழகத்தின் அனைத்துபகுதிகளிலும் மன்றங்களை நடடித்திவருகிறார்.அண்மையில் புதுச்சேரியில் விஜய் மக்கள் இயக்கத்;தை தொடங்கிவைத்து பேசிய விஜய் தான் அரசியலில் வர ஆர்வமாக இருப்பதாகவும் ஆனால் யோசித்து அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் ராகுல்காந்தியின் விஜயினை சந்திக்க நேரம் ஒதுக்கி டெல்லிவரச்சொல்ல சந்தித்துள்ளார். டெல்லியில் அவர் இருவரும் நீண்ட நேரம் அரசியல் பேசியதாக தெரிகிறது. இதுகுறித்து விஜயின் அரசியல் பிரவேசத்துக்கு உந்து சக்தியாக செயல்படும் அவரின் தந்தை சந்திரசேகரர் விஜய்-ராகுல் சந்திப்பு குறித்து கூறுகையில்.

''விஜய்க்கு ராகுல் காந்தி அபாய்ன்மெட்ன் கொடுத்திருந்தார். ஒரு மிகப்பெரிய கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல்காந்தியுடன் விஜய் நீண்ட நேரம் சந்தித்து பேசிய மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்கள் என்ன பேசினார்கள் என்பதை இப்போதைக்கு சொல்ல முடியாது.” ஏன்றார்.

இந்த சந்திப்புக்கு தமிழக காங்கிரஸ் கட்சியினர் தான் தீவிர முயற்சி எடுத்து ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்ற சொல்லப்படுகிறது. ''நடிகர் விஜயுடன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பேசியது. தமிழகத்தில் காங்கிரசினை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஒன்று. தமிழகத்தில் காங்கிரசினை பலப்படுத்த வேண்டும் என்பதில் ராகுல் தீவிரமாக இருக்கிறார்.

ராகுல் - விஜய் சந்திப்பு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் நல்ல அறிவிப்பினை சம்பந்தப்பட்டவர்கள் வெளியிடுவார்கள்.'' ஏன்றனர் தமிழக காங்கிரஸ் கட்சியினர்.

விஜயின் இந்த சந்திப்பு தமிழகத்தில் காங்கிரஸின் அரசியல் கணக்கை மாற்றி அமைக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். தமிழகத்தில் இளைஞர் காங்கிரசினை விஜய் தலைமையில் வலுப்படுத்த காங்கிரஸ் தலைமை விரும்புவதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் குட்டிஸ் விரும்பும் நடிகர் என்றால் விஜய்தான் காரணம் என்ன?
டான்ஸ்,யோக்,ஸ்டைல்,நடிப்பு மற்றும் பல அப்படியும் சொல்ல முடியாது பெரியவர்களுக்கும் விஜயை பிடிக்கிறது. பொதுவாக பார்த்தால் 2 வயது குட்டி கூட நீ கோவா பட்டால் என்னும் பாடலை பாடுகிறார்கள். இன்னும் ஒரு குழந்தையிடம்
உனக்கு விஜயிடம் என்ன பிடிக்கும் என கேட்டால் விஜயின் தலை முடி பிடிக்கும் என சொல்கிறார்கள். இறுதியாக ஒரு கருத்து கணிப்பை எடுப்போமானால் அதில் நம்பெர் ஒன்னு விஜய்தான்.

புதுச்சேரி, ஆக. 23: அரசியலில் நுழைய எனக்கு விருப்பம் உண்டு என்று என நடிகர் விஜய் தெரிவித்தார்.


புதுச்சேரி மாநில இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் மேற்கண்ட கருத்தை தெரிவித்தார்.

மாணவிகளின் கேள்விக்கு விஜய் அளித்த பதில்:

2020-ல் இந்தியா வல்லரசு ஆகும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் கூறியுள்ளார். ஏன் 2015-ல் வல்லரசு ஆகக்கூடாது?

விஜய்: இந்தியாவில் படித்து விட்டு இங்கேயே வேலை செய்தால் 2020 என்ன 2010-ல்கூட இந்தியா வல்லரசாக மாறும்.

50-வது படம் எப்படி இருக்கும்?

விஜய்: எனது 50-வது படம் கில்லி, யூத் போன்று இருக்காது. வேட்டைக்காரன் சற்று மாறுபட்ட கதையம்சம் கொண்ட புதுமாதிரியாக இருக்கும். நடனம், இசை, பாடுவது போன்றவை நான் கற்றுக்கொண்டதல்ல. எனக்கு கேள்வி ஞானத்தால் வந்தது.

இந்த மக்கள் இயக்கம் ஆரம்பித்ததற்கு அடிப்படை அரசியலா?

விஜய்: அரசியலில் எனக்கு உடன்பாடு உண்டு. இப்போது நேரம் இல்லை. அதற்கான காலமும் இதுவல்ல. வரவேண்டிய நேரத்தில் சரியாக வருவேன். அரசியல் ஒரு கடல். அதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.



இந்தியன் மாதிரி வேடங்களில் ஏன் நடிக்கவில்லை?

விஜய்: அது வயதான வேடம். நான் இளைஞன். அதனால் இளைஞர்கள் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.

என்னை சினிமாவில் நடிக்க வைப்பீர்களா என்று மாணவர் ஒருவர் கேட்டதற்கு, முதலில் படி, உன் தாய், தந்தையர்க்கு மகனாக இரு. பின்னர் பார்க்கலாம். நான் பள்ளியில் படிக்க ஆசையாய் இருக்கிறது என்றால் பள்ளிக்கு செல்ல முடியுமா அதுபோலத்தான். அந்த வயது வரும்போது சென்னைக்கு வா, உன்னை நடிக்க வைக்கிறேன் என்றார்.

இதையடுத்து முதல்வர் வெ.வைத்திலிங்கம் பேசுகையில், விஜய் புதுச்சேரி மாணவ, மாணவிகளுக்கு நிறைய அறிவுரைகள் வழங்கியுள்ளார். அவற்றை முறையாகப் பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும் என்றார்.

வரவேற்பு: முன்னதாக, புதுச்சேரி வந்த விஜய்க்கு, மாநில எல்லையான கோரிமேட்டில் புதுச்சேரி மாநில இளைய தளபதி விஜய் தலைமை நற்பணி மன்றம் சார்பில் தலைவர் புஸ்ஸி என்.ஆனந்த் எம்.எல்.ஏ. தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.


நன்றி தினமணி


விஜய்யின் ஐம்பதாவது படத்தை இயக்குகிறவர் எஸ்.ஏ.ரா‌ஜ்குமார் என்பது ஏறக்குறைய முடிவாகிவிட்டது. சங்கிலி முருகன் தயா‌ரிக்கும் இந்தப் படத்தில் இன்னொரு விஐபி நடிகரும் நடிக்கயிருக்கிறார்.

ஐம்பதாவது படத்தை எப்படியும் ஹிட்டாக்க வேண்டும் என்பது விஜய்யின் கனவு. எஸ்.ஏ.ரா‌ஜ்குமா‌ரின் கதை தனது கனவை நிறைவேற்றும் என்று நம்புகிறார் விஜய். தமன்னா ஜோடி, காமெடிக்கு வடிவேலு என நடிப்பு சைடில் எல்லாம் ஓகே. வில்லன் மட்டுமே பாக்கி.

வில்லனாக நடிக்க விஜய்யின் சாய்ஸ் பசுபதி. திறமையான நடிகர், சமீபத்தில் எந்தப் படத்திலும் வில்லத்தனம் செய்யாததால் புதுசாகவும் தெ‌ரியும். மேலும், பிற மாநில நடிகர்களை நடிக்க வைக்கும் போது ஏற்படும் அந்நியத்தன்மையும் இருக்காது.

விஜய்யின் விருப்பம் பசுபதியிடம் தெ‌ரிவிக்கப்பட்டிருக்கிறது. பாஸிட்டிவ்வான பதிலே கிடைக்கும் என்கிறார்கள் நம்பிக்கையுடன்.


மீண்டும் தரணி இயக்கத்தில் நடிக்கிறாராம் விஜய். இந்த செய்திதான் தற்போது இன்டஸ்ட்‌ரியை கலக்கிக் கொண்டிருக்கிறது.

விஜய் நடித்துவரும் வேட்டைக்காரன் அவரது 49வது படம். ஐம்பதாவது படத்தை சங்கிலி முருகன் தயா‌ரிக்க எஸ்.ஏ. ரா‌ஜ்குமார் இயக்குகிறார். இந்தப் படத்துக்குப் பிறகு மீண்டும் தரணி இயக்கத்தில் நடிக்க தீர்மானித்திருக்கிறாராம் விஜய்.

கில்லி, குருவி படங்களுக்குப் பிறகு இவர்கள் இணையும் இந்தப் படத்தை தயா‌ரிக்கப் போகிறவர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் என்கிறார்கள். விரைவில் இது பற்றிய அறிவிப்பை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்


நடிகை குஷ்பூவிற்கு பிடித்த நடிகர் விஜய் என்று மானாட மயிலாடவில் தெரிவித்துள்ளார். மின்சார கன்னாவில் நானும் நடித்துள்ளேன் விஜய் மிகவும் பிரமாதமாய் நடிப்பார். விஜயின் வில்லு படத்தில் கூட ராமா ராமா எனும் பாடலில் நடனமாடியுளேன்.முதலாவதாக நான் மிகவும் பயந்தேன் ஏனென்றல் விஜய் மாதிரி நான் ஆடமாட்டேன்.விஜய் மிகவும் அழகாக நடனம் ஆடுவார்.ஒரு ஸ்டேப் நல்லாவரமட்டும் ஆடிக்கொண்டே இருப்பார் எனக்கு தெரிந்தவரை எந்தவொரு ச்டேபுமே கஷ்டம் என்று சொல்லமாட்டார்.இவ்வாறு விஜயை புகழ்ந்து தள்ளியுள்ளார் குஷ்பூ.

”பொதுவா நாங்க யார் வம்புக்கும் போக மாட்டோம். ஆனா ஆட்டம், போட்டி, பந்தயம்னு வந்துட்டா சும்மா சொல்லி அடிப்போம் கில்லி கில்லி மாதிரி”
செளந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கும் கன்னட ரீமேக் படத்தில் விஜய் அல்லது தனுஷ் நடிப்பார்கள் எனத் தெரிகிறது. இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செளந்தர்யா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான சர்க்கஸ் என்ற கன்னட படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் கணேஷ் கதாநாயகனாகவும், அர்ச்சனா குப்தா (வேகம் பட நாயகி) கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். தயாள் தயாரித்து, டைரக்டு செய்துள்ளார்.

ரூ.5.5 கோடி செலவில் படம் தயாரான இந்தப்படத்தின் படப்பிடிப்பு மட்டும் ஓடும் ரயிலில் 30 நாட்கள் நடத்தப்பட்டுள்ளது.

இந்த படத்தை ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் பார்க்க விரும்பினார். அவருக்காக சென்னை போர் பிரேம்ஸ் தியேட்டரில் அந்த படம் திரையிடப்பட்டது.

தாமதமாக…:

செளந்தர்யா கொஞ்சம் காலதாமதமாக படத்துக்கு வந்தார். அவர் வருவதற்குள் ஒரு `ரீல்’ ஓடிவிட்டது. என்றாலும் செளந்தர்யா படத்தை ரசித்து பார்த்தார். படம் முடிந்தபின், அவருக்காக முதல் ஒரு ரீல் மீண்டும் திரையிடப்பட்டது.

சர்க்கஸ் படம், அவருக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். இதே படத்தை தமிழில் தயாரிப்பதற்கான உரிமையை செளந்தர்யா வாங்கிவிட்டார்.

வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தை தமிழில் தயாரிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

படத்தின் ஹீரோ யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. விஜய், தனுஷூடன் பேசி வருகிறோம். உறுதியான பிறகு அறிவிப்போம் என்றார் செளந்தர்யா.

செளந்தர்யா இப்போது தன் தந்தை ரஜினி நடிக்கும் சுல்தான் தி வாரியர் எனும் அனிமஷன் படத்தை ரூ.70 கோடி செலவில் 8 மொழிகளில் தயாரித்து இயக்கி வருகிறார். அடுத்து கோவா என்ற படத்தை வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாரிக்கிறார்.

அஜீத்தை வைத்து பில்லா-2 எடுக்க திட்டமிட்டார். ஆனால் அதிலிருந்து அஜீத் திடீரென்று விலகிக் கொள்ள அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. இப்போது விஜய்யை வைத்து சர்க்ஸை எடுக்க தீவிரமாக முயற்சித்து வருகிறார்.
வேட்டைக்காரன் விஜய் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் படம். ஏற்கனவே வெளியான குருவிஇ வில்லு இரண்டும் சுமார் ரகம் என்றாகிவிடஇ வேட்டைக்காரன் படத்தை விஜய்யே மிகவும் எதிர்பார்க்கிறார்.
தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. ஒரு பாடல் காட்சிக்கும்இ சண்டைக் காட்சிக்கும் images48சுமார் 40 லட்ச ரூபாய் செட் போடப்பட்டிருக்கிறது. மொத்தம் பத்து நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருக்கின்றனர். மேலும்இ பாடல் காட்சிக்கும்இ சண்டைக் காட்சிக்கும் ஏராளமான ஜுனியர் நடிகர்கள் தேவைப்படுவதால் முன்கூட்டியே ஒப்பந்தம் செய்து வைத்துள்ளனர்.

அதேபோல்இ சண்டைக் காட்சியில் இதுவரை இல்லாத பல புது யுக்திகளை பயன்படுத்தப் போகிறார்களாம். அது என்ன என்று கேட்டால் சஸ்பென்ஸ் என்கிறார் இயக்குனர்.

பரம்பரை பரம்பரையாய் அடிமைத்தளையில் சிக்குண்ட நம் அன்னை பாரதம் சுதந்திரம் பெற்ற நாள் இந்நாள்! இந்த நன்னாளில் எனதருமைத் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த சுதந்திர தினத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த எழுச்சித் திருநாளில், ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு, ஊமைகளாய், உரிமைகளை மறந்திருந்த மக்களை தட்டி எழுப்பி, படை பல வந்திடினும், தடை பல நேரிடினும் அஞ்சாதீர் என்ற வீர உணர்வை ஊட்டி, முதன் முதலில் சுதந்திர விதையை விதைத்த வீரபாண்டிய கட்டபொம்மன்; வெள்ளையனே வெளியேறு' என்று முதன் முதலாக முழக்கமிட்ட பூலித்தேவன்; தீரன் சின்னமலை; செக்கிழுத்த செம்மல்' சிதம்பரனார்; தீரர் சத்தியமூர்த்தி; மகாகவி பாரதியார்; வீரமங்கை வேலுநாச்சியார்; சுப்ரமண்ய சிவா; கொடிகாத்த குமரன்; வீரமரணம் அடைந்த வாஞ்சிநாதன்; புரட்சி வீரர் பகத் சிங்; மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்; தில்லையாடி வள்ளியம்மை; தேவர் திருமகனார்; மருது சகோதரர்கள் போன்ற எண்ணற்ற தியாகச்சீலர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு என்னுடைய வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விடுதலை பெற்று அறுபது ஆண்டுகளுக்கு மேலாகியும், வறுமை இன்னமும் மக்களை வாட்டிக் கொண்டு தான் இருக்கிறது! ஏழ்மை என்ற நிலை இந்தியாவில் இல்லை என்று சொல்லக்கூடிய நாள் வரவேண்டும்! மக்கள் அச்சமின்றி சுதந்திரமாக நடமாடக்கூடிய நிலைமை வரவேண்டும்! பொதுச் சொத்துக்களை கொள்ளையடிக்கும் நிலை மாற வேண்டும்!

'தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்று வாழும் மனிதர் அனைவருக்கும் உணவிட வேண்டியதன் இன்றியமையாமையை வலியுறுத்திய பாரதி கண்ட சமுதாயத்தை உருவாக்கவும், மக்களின் நல்வாழ்வு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படக்கூடிய தன்னலமற்ற ஆட்சி அமையவும் இந்தத் திருநாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம்! பாரதம் பாரினில் சிறக்கவும், தமிழகம் தரணியில் தழைத்தோங்கவும் பாடுபடுவோம்!
இப்போது இந்த கெட்டப்பிலேயே விஜய் தனது படமான வேட்டைக்காரனில் ஒரு பாடலுக்குத் தூள் பரக்கும் நடனமாடியிருக்கிறார். பாபு சிவன் இயக்கும் வேட்டைக்காரனின் பாடல் காட்சி அண்மையில் ஏவி.எம். ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான கெட்டப்பில் விஜய் தனது ஜோடி அனுஷ்காவுடன் ஆட்டம் போட்டுள்ள இந்தப் பாடல்தான் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் டாக். நடன இயக்குனர் பாபு பாஸ்கரின் டிபிக்கலான மூவ்மெண்டுகளை அனயாசமாக ஆடிக்காட்டி அசத்தியிருக்கிறார் விஜய். ரிங்டோனாகவும், டயலர் டோனாகவும் ரசிகர்களின் காதுகளில் ஒலிக்கப் போகும் அந்தப் பாடல் பெரிய அளவில் ஒரு கலக்கு கலக்க வேண்டும் என உத்தேசித்து ஒவ்வொரு அசைவுகளையும் தேர்ந்தெடுத்து தந்துள்ளார் நடன இயக்குனர் பாபு பாஸ்கர்.



விஜய் நடிக்கும் வேட்டைக்காரன் படத்தின் படப்பிடிப்பு இம்மாதத்துடன் முடிகிறது. இரண்டு பாடல்களை வெளிநாட்டில் எடுக்க உள்ளனர். சிலநாட்களுக்கு முன் ஏவிஎம் ஸ்டூடியோ ஏழாவது புளோரில் அரங்கம் எரிந்து விபத்து ஏற்பட்ட நிலையிலும் படப்பிடிப்பு பாதிக்கப்படவில்லை. எட்டாவது புளோரில் அதேபோல் அரங்கம் அமைத்து படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். "தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்வதில் உறுதியாக இருக்கிறோம்" என்கிறார் ஏவிஎம் பாலசுப்பிரமணியம்


பேரரசு, ராஜா என விஜய்யின் 50-வது படத்தை இயக்கப்போகும் இயக்குனர்கள் யாரென்ற குழப்பத்திற்கு ஒரு வழியாக விடை கிடைத்துவிட்டது.

ஏவிஎம் தயாரிப்பில் ‘வேட்டைக்காரன்’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். தனது 50-வது படம் மெகா கமர்ஷியல் வெற்றியை பார்த்துவிடவேண்டும் என்ற அக்கறையில் இருக்கிறார் இளையதளபதி. தனது 50-வது படத்திற்கு அரை டஜன் இயக்குனர்களிடம் கதை கேட்டார் விஜய். அதில் பேரரசுவும், எம்.ராஜாவும் அடங்குவர். இந்த இருவரில் ஒருவர்தான் முடிவாகுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.


ஆனால் எதிர்பாராத ஒரு முடிவை எடுத்துள்ளார் விஜய். எஸ்.பி.ராஜ்குமார் பெயரை டிக் அடித்துள்ளார் விஜய். பிரபு படங்கள் சிலவற்றை இயக்கியவர்தான் எஸ்.பி.ராஜ்குமார். தற்போது திரைக்கு வந்திருக்கும் ‘அழகர்மலை’ படத்தை இயக்கியுள்ளார். கிராமம் சார்ந்த கதைகளை இயக்குவதுதான் இவரது ஸ்டைல்.


ஆக விஜய்யின் படமும் கிராமம்- நகரம் கலந்த கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘உரிமைக்குரல்’, ‘மீனவநண்பன் ’ போன்ற எம்.ஜி.ஆர் பட தலைப்புகள் பரிசீலனையில் இருந்தாலும் இன்னும் தலைப்பு உறுதி செய்யப்படவில்லை. சங்கிலிமுருகன் படத்தை தயாரிக்கிறார். விஜய் ஜோடியாக தமன்னா நடிக்கிறார். மணிசர்மா இசையமைக்க, எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.
Blog Widget by LinkWithin