நாட்டிலிருந்து வருகை தந்திருக்கும் விஜய் ரசிகர்








காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தியுடன் நடிகர் விஜய் சந்தித்து பல மணி நேரம் உரையாடினார். தமிழ்நாட்டில் இளைஞர்காங்கிரசை வலுப்படுத்தும் நோக்கத்தில் ராகுல்காந்தியின் உத்தரவுப்பட இளைஞர்காங்கிரஸ் உறுப்பினர்கள் சேர்ப்புப்பணியில் தமிழக காங்கிரஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

அதே நேரம் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் நடிகர் விஜய் தமிழகத்தின் அனைத்துபகுதிகளிலும் மன்றங்களை நடடித்திவருகிறார்.அண்மையில் புதுச்சேரியில் விஜய் மக்கள் இயக்கத்;தை தொடங்கிவைத்து பேசிய விஜய் தான் அரசியலில் வர ஆர்வமாக இருப்பதாகவும் ஆனால் யோசித்து அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் ராகுல்காந்தியின் விஜயினை சந்திக்க நேரம் ஒதுக்கி டெல்லிவரச்சொல்ல சந்தித்துள்ளார். டெல்லியில் அவர் இருவரும் நீண்ட நேரம் அரசியல் பேசியதாக தெரிகிறது. இதுகுறித்து விஜயின் அரசியல் பிரவேசத்துக்கு உந்து சக்தியாக செயல்படும் அவரின் தந்தை சந்திரசேகரர் விஜய்-ராகுல் சந்திப்பு குறித்து கூறுகையில்.

''விஜய்க்கு ராகுல் காந்தி அபாய்ன்மெட்ன் கொடுத்திருந்தார். ஒரு மிகப்பெரிய கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல்காந்தியுடன் விஜய் நீண்ட நேரம் சந்தித்து பேசிய மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்கள் என்ன பேசினார்கள் என்பதை இப்போதைக்கு சொல்ல முடியாது.” ஏன்றார்.

இந்த சந்திப்புக்கு தமிழக காங்கிரஸ் கட்சியினர் தான் தீவிர முயற்சி எடுத்து ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்ற சொல்லப்படுகிறது. ''நடிகர் விஜயுடன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பேசியது. தமிழகத்தில் காங்கிரசினை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஒன்று. தமிழகத்தில் காங்கிரசினை பலப்படுத்த வேண்டும் என்பதில் ராகுல் தீவிரமாக இருக்கிறார்.

ராகுல் - விஜய் சந்திப்பு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் நல்ல அறிவிப்பினை சம்பந்தப்பட்டவர்கள் வெளியிடுவார்கள்.'' ஏன்றனர் தமிழக காங்கிரஸ் கட்சியினர்.

விஜயின் இந்த சந்திப்பு தமிழகத்தில் காங்கிரஸின் அரசியல் கணக்கை மாற்றி அமைக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். தமிழகத்தில் இளைஞர் காங்கிரசினை விஜய் தலைமையில் வலுப்படுத்த காங்கிரஸ் தலைமை விரும்புவதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் குட்டிஸ் விரும்பும் நடிகர் என்றால் விஜய்தான் காரணம் என்ன?
டான்ஸ்,யோக்,ஸ்டைல்,நடிப்பு மற்றும் பல அப்படியும் சொல்ல முடியாது பெரியவர்களுக்கும் விஜயை பிடிக்கிறது. பொதுவாக பார்த்தால் 2 வயது குட்டி கூட நீ கோவா பட்டால் என்னும் பாடலை பாடுகிறார்கள். இன்னும் ஒரு குழந்தையிடம்
உனக்கு விஜயிடம் என்ன பிடிக்கும் என கேட்டால் விஜயின் தலை முடி பிடிக்கும் என சொல்கிறார்கள். இறுதியாக ஒரு கருத்து கணிப்பை எடுப்போமானால் அதில் நம்பெர் ஒன்னு விஜய்தான்.

புதுச்சேரி, ஆக. 23: அரசியலில் நுழைய எனக்கு விருப்பம் உண்டு என்று என நடிகர் விஜய் தெரிவித்தார்.


புதுச்சேரி மாநில இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் மேற்கண்ட கருத்தை தெரிவித்தார்.

மாணவிகளின் கேள்விக்கு விஜய் அளித்த பதில்:

2020-ல் இந்தியா வல்லரசு ஆகும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் கூறியுள்ளார். ஏன் 2015-ல் வல்லரசு ஆகக்கூடாது?

விஜய்: இந்தியாவில் படித்து விட்டு இங்கேயே வேலை செய்தால் 2020 என்ன 2010-ல்கூட இந்தியா வல்லரசாக மாறும்.

50-வது படம் எப்படி இருக்கும்?

விஜய்: எனது 50-வது படம் கில்லி, யூத் போன்று இருக்காது. வேட்டைக்காரன் சற்று மாறுபட்ட கதையம்சம் கொண்ட புதுமாதிரியாக இருக்கும். நடனம், இசை, பாடுவது போன்றவை நான் கற்றுக்கொண்டதல்ல. எனக்கு கேள்வி ஞானத்தால் வந்தது.

இந்த மக்கள் இயக்கம் ஆரம்பித்ததற்கு அடிப்படை அரசியலா?

விஜய்: அரசியலில் எனக்கு உடன்பாடு உண்டு. இப்போது நேரம் இல்லை. அதற்கான காலமும் இதுவல்ல. வரவேண்டிய நேரத்தில் சரியாக வருவேன். அரசியல் ஒரு கடல். அதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.



இந்தியன் மாதிரி வேடங்களில் ஏன் நடிக்கவில்லை?

விஜய்: அது வயதான வேடம். நான் இளைஞன். அதனால் இளைஞர்கள் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.

என்னை சினிமாவில் நடிக்க வைப்பீர்களா என்று மாணவர் ஒருவர் கேட்டதற்கு, முதலில் படி, உன் தாய், தந்தையர்க்கு மகனாக இரு. பின்னர் பார்க்கலாம். நான் பள்ளியில் படிக்க ஆசையாய் இருக்கிறது என்றால் பள்ளிக்கு செல்ல முடியுமா அதுபோலத்தான். அந்த வயது வரும்போது சென்னைக்கு வா, உன்னை நடிக்க வைக்கிறேன் என்றார்.

இதையடுத்து முதல்வர் வெ.வைத்திலிங்கம் பேசுகையில், விஜய் புதுச்சேரி மாணவ, மாணவிகளுக்கு நிறைய அறிவுரைகள் வழங்கியுள்ளார். அவற்றை முறையாகப் பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும் என்றார்.

வரவேற்பு: முன்னதாக, புதுச்சேரி வந்த விஜய்க்கு, மாநில எல்லையான கோரிமேட்டில் புதுச்சேரி மாநில இளைய தளபதி விஜய் தலைமை நற்பணி மன்றம் சார்பில் தலைவர் புஸ்ஸி என்.ஆனந்த் எம்.எல்.ஏ. தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.


நன்றி தினமணி


விஜய்யின் ஐம்பதாவது படத்தை இயக்குகிறவர் எஸ்.ஏ.ரா‌ஜ்குமார் என்பது ஏறக்குறைய முடிவாகிவிட்டது. சங்கிலி முருகன் தயா‌ரிக்கும் இந்தப் படத்தில் இன்னொரு விஐபி நடிகரும் நடிக்கயிருக்கிறார்.

ஐம்பதாவது படத்தை எப்படியும் ஹிட்டாக்க வேண்டும் என்பது விஜய்யின் கனவு. எஸ்.ஏ.ரா‌ஜ்குமா‌ரின் கதை தனது கனவை நிறைவேற்றும் என்று நம்புகிறார் விஜய். தமன்னா ஜோடி, காமெடிக்கு வடிவேலு என நடிப்பு சைடில் எல்லாம் ஓகே. வில்லன் மட்டுமே பாக்கி.

வில்லனாக நடிக்க விஜய்யின் சாய்ஸ் பசுபதி. திறமையான நடிகர், சமீபத்தில் எந்தப் படத்திலும் வில்லத்தனம் செய்யாததால் புதுசாகவும் தெ‌ரியும். மேலும், பிற மாநில நடிகர்களை நடிக்க வைக்கும் போது ஏற்படும் அந்நியத்தன்மையும் இருக்காது.

விஜய்யின் விருப்பம் பசுபதியிடம் தெ‌ரிவிக்கப்பட்டிருக்கிறது. பாஸிட்டிவ்வான பதிலே கிடைக்கும் என்கிறார்கள் நம்பிக்கையுடன்.


மீண்டும் தரணி இயக்கத்தில் நடிக்கிறாராம் விஜய். இந்த செய்திதான் தற்போது இன்டஸ்ட்‌ரியை கலக்கிக் கொண்டிருக்கிறது.

விஜய் நடித்துவரும் வேட்டைக்காரன் அவரது 49வது படம். ஐம்பதாவது படத்தை சங்கிலி முருகன் தயா‌ரிக்க எஸ்.ஏ. ரா‌ஜ்குமார் இயக்குகிறார். இந்தப் படத்துக்குப் பிறகு மீண்டும் தரணி இயக்கத்தில் நடிக்க தீர்மானித்திருக்கிறாராம் விஜய்.

கில்லி, குருவி படங்களுக்குப் பிறகு இவர்கள் இணையும் இந்தப் படத்தை தயா‌ரிக்கப் போகிறவர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் என்கிறார்கள். விரைவில் இது பற்றிய அறிவிப்பை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்


நடிகை குஷ்பூவிற்கு பிடித்த நடிகர் விஜய் என்று மானாட மயிலாடவில் தெரிவித்துள்ளார். மின்சார கன்னாவில் நானும் நடித்துள்ளேன் விஜய் மிகவும் பிரமாதமாய் நடிப்பார். விஜயின் வில்லு படத்தில் கூட ராமா ராமா எனும் பாடலில் நடனமாடியுளேன்.முதலாவதாக நான் மிகவும் பயந்தேன் ஏனென்றல் விஜய் மாதிரி நான் ஆடமாட்டேன்.விஜய் மிகவும் அழகாக நடனம் ஆடுவார்.ஒரு ஸ்டேப் நல்லாவரமட்டும் ஆடிக்கொண்டே இருப்பார் எனக்கு தெரிந்தவரை எந்தவொரு ச்டேபுமே கஷ்டம் என்று சொல்லமாட்டார்.இவ்வாறு விஜயை புகழ்ந்து தள்ளியுள்ளார் குஷ்பூ.

”பொதுவா நாங்க யார் வம்புக்கும் போக மாட்டோம். ஆனா ஆட்டம், போட்டி, பந்தயம்னு வந்துட்டா சும்மா சொல்லி அடிப்போம் கில்லி கில்லி மாதிரி”
செளந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கும் கன்னட ரீமேக் படத்தில் விஜய் அல்லது தனுஷ் நடிப்பார்கள் எனத் தெரிகிறது. இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செளந்தர்யா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான சர்க்கஸ் என்ற கன்னட படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் கணேஷ் கதாநாயகனாகவும், அர்ச்சனா குப்தா (வேகம் பட நாயகி) கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். தயாள் தயாரித்து, டைரக்டு செய்துள்ளார்.

ரூ.5.5 கோடி செலவில் படம் தயாரான இந்தப்படத்தின் படப்பிடிப்பு மட்டும் ஓடும் ரயிலில் 30 நாட்கள் நடத்தப்பட்டுள்ளது.

இந்த படத்தை ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் பார்க்க விரும்பினார். அவருக்காக சென்னை போர் பிரேம்ஸ் தியேட்டரில் அந்த படம் திரையிடப்பட்டது.

தாமதமாக…:

செளந்தர்யா கொஞ்சம் காலதாமதமாக படத்துக்கு வந்தார். அவர் வருவதற்குள் ஒரு `ரீல்’ ஓடிவிட்டது. என்றாலும் செளந்தர்யா படத்தை ரசித்து பார்த்தார். படம் முடிந்தபின், அவருக்காக முதல் ஒரு ரீல் மீண்டும் திரையிடப்பட்டது.

சர்க்கஸ் படம், அவருக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். இதே படத்தை தமிழில் தயாரிப்பதற்கான உரிமையை செளந்தர்யா வாங்கிவிட்டார்.

வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தை தமிழில் தயாரிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

படத்தின் ஹீரோ யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. விஜய், தனுஷூடன் பேசி வருகிறோம். உறுதியான பிறகு அறிவிப்போம் என்றார் செளந்தர்யா.

செளந்தர்யா இப்போது தன் தந்தை ரஜினி நடிக்கும் சுல்தான் தி வாரியர் எனும் அனிமஷன் படத்தை ரூ.70 கோடி செலவில் 8 மொழிகளில் தயாரித்து இயக்கி வருகிறார். அடுத்து கோவா என்ற படத்தை வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாரிக்கிறார்.

அஜீத்தை வைத்து பில்லா-2 எடுக்க திட்டமிட்டார். ஆனால் அதிலிருந்து அஜீத் திடீரென்று விலகிக் கொள்ள அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. இப்போது விஜய்யை வைத்து சர்க்ஸை எடுக்க தீவிரமாக முயற்சித்து வருகிறார்.
வேட்டைக்காரன் விஜய் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் படம். ஏற்கனவே வெளியான குருவிஇ வில்லு இரண்டும் சுமார் ரகம் என்றாகிவிடஇ வேட்டைக்காரன் படத்தை விஜய்யே மிகவும் எதிர்பார்க்கிறார்.
தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. ஒரு பாடல் காட்சிக்கும்இ சண்டைக் காட்சிக்கும் images48சுமார் 40 லட்ச ரூபாய் செட் போடப்பட்டிருக்கிறது. மொத்தம் பத்து நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருக்கின்றனர். மேலும்இ பாடல் காட்சிக்கும்இ சண்டைக் காட்சிக்கும் ஏராளமான ஜுனியர் நடிகர்கள் தேவைப்படுவதால் முன்கூட்டியே ஒப்பந்தம் செய்து வைத்துள்ளனர்.

அதேபோல்இ சண்டைக் காட்சியில் இதுவரை இல்லாத பல புது யுக்திகளை பயன்படுத்தப் போகிறார்களாம். அது என்ன என்று கேட்டால் சஸ்பென்ஸ் என்கிறார் இயக்குனர்.

பரம்பரை பரம்பரையாய் அடிமைத்தளையில் சிக்குண்ட நம் அன்னை பாரதம் சுதந்திரம் பெற்ற நாள் இந்நாள்! இந்த நன்னாளில் எனதருமைத் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த சுதந்திர தினத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த எழுச்சித் திருநாளில், ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு, ஊமைகளாய், உரிமைகளை மறந்திருந்த மக்களை தட்டி எழுப்பி, படை பல வந்திடினும், தடை பல நேரிடினும் அஞ்சாதீர் என்ற வீர உணர்வை ஊட்டி, முதன் முதலில் சுதந்திர விதையை விதைத்த வீரபாண்டிய கட்டபொம்மன்; வெள்ளையனே வெளியேறு' என்று முதன் முதலாக முழக்கமிட்ட பூலித்தேவன்; தீரன் சின்னமலை; செக்கிழுத்த செம்மல்' சிதம்பரனார்; தீரர் சத்தியமூர்த்தி; மகாகவி பாரதியார்; வீரமங்கை வேலுநாச்சியார்; சுப்ரமண்ய சிவா; கொடிகாத்த குமரன்; வீரமரணம் அடைந்த வாஞ்சிநாதன்; புரட்சி வீரர் பகத் சிங்; மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்; தில்லையாடி வள்ளியம்மை; தேவர் திருமகனார்; மருது சகோதரர்கள் போன்ற எண்ணற்ற தியாகச்சீலர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு என்னுடைய வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விடுதலை பெற்று அறுபது ஆண்டுகளுக்கு மேலாகியும், வறுமை இன்னமும் மக்களை வாட்டிக் கொண்டு தான் இருக்கிறது! ஏழ்மை என்ற நிலை இந்தியாவில் இல்லை என்று சொல்லக்கூடிய நாள் வரவேண்டும்! மக்கள் அச்சமின்றி சுதந்திரமாக நடமாடக்கூடிய நிலைமை வரவேண்டும்! பொதுச் சொத்துக்களை கொள்ளையடிக்கும் நிலை மாற வேண்டும்!

'தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்று வாழும் மனிதர் அனைவருக்கும் உணவிட வேண்டியதன் இன்றியமையாமையை வலியுறுத்திய பாரதி கண்ட சமுதாயத்தை உருவாக்கவும், மக்களின் நல்வாழ்வு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படக்கூடிய தன்னலமற்ற ஆட்சி அமையவும் இந்தத் திருநாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம்! பாரதம் பாரினில் சிறக்கவும், தமிழகம் தரணியில் தழைத்தோங்கவும் பாடுபடுவோம்!
இப்போது இந்த கெட்டப்பிலேயே விஜய் தனது படமான வேட்டைக்காரனில் ஒரு பாடலுக்குத் தூள் பரக்கும் நடனமாடியிருக்கிறார். பாபு சிவன் இயக்கும் வேட்டைக்காரனின் பாடல் காட்சி அண்மையில் ஏவி.எம். ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான கெட்டப்பில் விஜய் தனது ஜோடி அனுஷ்காவுடன் ஆட்டம் போட்டுள்ள இந்தப் பாடல்தான் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் டாக். நடன இயக்குனர் பாபு பாஸ்கரின் டிபிக்கலான மூவ்மெண்டுகளை அனயாசமாக ஆடிக்காட்டி அசத்தியிருக்கிறார் விஜய். ரிங்டோனாகவும், டயலர் டோனாகவும் ரசிகர்களின் காதுகளில் ஒலிக்கப் போகும் அந்தப் பாடல் பெரிய அளவில் ஒரு கலக்கு கலக்க வேண்டும் என உத்தேசித்து ஒவ்வொரு அசைவுகளையும் தேர்ந்தெடுத்து தந்துள்ளார் நடன இயக்குனர் பாபு பாஸ்கர்.



விஜய் நடிக்கும் வேட்டைக்காரன் படத்தின் படப்பிடிப்பு இம்மாதத்துடன் முடிகிறது. இரண்டு பாடல்களை வெளிநாட்டில் எடுக்க உள்ளனர். சிலநாட்களுக்கு முன் ஏவிஎம் ஸ்டூடியோ ஏழாவது புளோரில் அரங்கம் எரிந்து விபத்து ஏற்பட்ட நிலையிலும் படப்பிடிப்பு பாதிக்கப்படவில்லை. எட்டாவது புளோரில் அதேபோல் அரங்கம் அமைத்து படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். "தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்வதில் உறுதியாக இருக்கிறோம்" என்கிறார் ஏவிஎம் பாலசுப்பிரமணியம்


பேரரசு, ராஜா என விஜய்யின் 50-வது படத்தை இயக்கப்போகும் இயக்குனர்கள் யாரென்ற குழப்பத்திற்கு ஒரு வழியாக விடை கிடைத்துவிட்டது.

ஏவிஎம் தயாரிப்பில் ‘வேட்டைக்காரன்’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். தனது 50-வது படம் மெகா கமர்ஷியல் வெற்றியை பார்த்துவிடவேண்டும் என்ற அக்கறையில் இருக்கிறார் இளையதளபதி. தனது 50-வது படத்திற்கு அரை டஜன் இயக்குனர்களிடம் கதை கேட்டார் விஜய். அதில் பேரரசுவும், எம்.ராஜாவும் அடங்குவர். இந்த இருவரில் ஒருவர்தான் முடிவாகுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.


ஆனால் எதிர்பாராத ஒரு முடிவை எடுத்துள்ளார் விஜய். எஸ்.பி.ராஜ்குமார் பெயரை டிக் அடித்துள்ளார் விஜய். பிரபு படங்கள் சிலவற்றை இயக்கியவர்தான் எஸ்.பி.ராஜ்குமார். தற்போது திரைக்கு வந்திருக்கும் ‘அழகர்மலை’ படத்தை இயக்கியுள்ளார். கிராமம் சார்ந்த கதைகளை இயக்குவதுதான் இவரது ஸ்டைல்.


ஆக விஜய்யின் படமும் கிராமம்- நகரம் கலந்த கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘உரிமைக்குரல்’, ‘மீனவநண்பன் ’ போன்ற எம்.ஜி.ஆர் பட தலைப்புகள் பரிசீலனையில் இருந்தாலும் இன்னும் தலைப்பு உறுதி செய்யப்படவில்லை. சங்கிலிமுருகன் படத்தை தயாரிக்கிறார். விஜய் ஜோடியாக தமன்னா நடிக்கிறார். மணிசர்மா இசையமைக்க, எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.












தேன் தேன் தேன்
உன்னை தேடி அழைந்தேன்
உயிர் தீயாய் அழைந்தேன்
சிவந்தேன்...

தேன் தேன் தேன்
என்னை நானும் மறந்தேன்
உன்னை காண தயந்தேன்
கரைந்தேன்..

என்னவோ சொல்ல தொடந்தேன்
ஏதேதோ செய்ய தொடந்தேன்
உன்னோட சேரத்தானே நானும் அழைந்தேன்

தேன் தேன் தேன்
உன்னை தேடி அழைந்தேன்
உயிர் தீயாய் அழைந்தேன்
சிவந்தேன்...

வல்லவரும் கையை ரசித்தேன்
ஆழவரும் கண்ணை ரசித்தேன்
அடங்காமல் தாவும் உந்தன் அன்பை ரசித்தேன்
கொத்த வரும் பொய்யை ரசித்தேன்
மோத வரும் மெய்யை ரசித்தேன்
உறங்காமல் எங்கும் உந்தன் உள்ளம் ரசித்தேன்

நீ சொல்லும் சொல்லை ரசித்தேன்
ஏதும் சொல்லும் அதையும் ரசித்தேன்
நீ செய்யும் யாவும் ரசித்தேன்
எதும் செய்யாததையும் ரசித்தேன்
உன்னாலே தானே நானும் உள்ளம் ரசித்தேன்

தேன் தேன் தேன்
உன்னை தேடி அழைந்தேன்
உயிர் தீயாய் அழைந்தேன்
சிவந்தேன்...

சேலையில் நிலாவை அறிந்தேன்
காலிலே சிறகை அறிந்தேன்
கனவிலே காதல் என்று நேரில் அறிந்தேன்
திருடனே உன்னை அறிந்தேன்
திருடிய என்னை அறிந்தேன்
என் உன்னை திருட தானே ஆசை அறிந்தேன்

என் பக்கம் உன்னை அறிந்தேன்
பல சிக்கல் உன்னால் அறிந்தேன்
உன் தென்றல் உன்னால் அறிந்தேன்
அதில் தோசம் பின்பாய் அறிந்தேன்
நீ நடமாடும் ராட்சை தோட்டம் எதிரில் அறிந்தேன்

தேன் தேன் தேன்
உன்னை தேடி அழைந்தேன்
உயிர் தீயாய் அழைந்தேன்
சிவந்தேன்...

ஏய்..
தேன் தேன் தேன்
என்னை நானும் மறந்தேன்
உன்னை காண தயந்தேன்
கரைந்தேன்.



பெண் : கேளாமல் கையிலே வந்தாயே காதலே
கேட்டு ரசித்த பாடல் ஒன்றை
மீண்டும் இந்த ஞாபகம் தூண்ட
கேட்டு ரசித்த பாடல் ஒன்றை
மீண்டும் இந்த ஞாபகம் தூண்ட
என்னை உன்னை எண்ணி யாரோ
எழுதியது போலவே தோன்ற….
என்னை உன்னை எண்ணி யாரோ
எழுதியது போலவே தோன்ற….
ஆண் : கேளாமல் கையிலே வந்தாயே காதலே
என் பேரை கூறிடும் உன்பேரும் கோகிலம்
பெண் : கோகிலம்.. கோகிலம் … கோகிலம்..
நெஞ்சிலே காதலின் கால்தடம்..
கேளாமல் கையிலே வந்தாயே.. காதலே
என் ராமன் நீயெனில் உன்கையில் நான் அணில்

ஆண் : இனிமேல் இனிமேல் இந்த நானும் நானில்லை
போய்வா போய்வா என்றே எனக்கே விடைகள் தந்தேன்
பெண் : மெலிதாய் மெலிதாய் நானிருந்தேன்
மிக எளிதாய் எங்கும் நடந்தேன்
இன்று உனை நெஞ்சில் சுமந்தேன்
நான் நடந்தேன்.. நடந்தும் விழுந்தேன்
ஆண் : கூந்தலென்னும் ஏணி ஏறி
முத்தமிட ஆசைகள் உண்டு
பெண் : நெற்றி மூக்கு உதடு என்றே
இறங்கி வர படிகளும் உண்டு

ஆண் : கேளாமல் கையிலே வந்தாயே காதலே
என் பேரை கூறிடும் உன்பேரும் கோகிலம்

பெண் : பார்த்தும் பாராமலே போகும் மேகங்களே
பார்த்தும் பாராமலே போகும் மேகங்களே
ஏதோ நடக்கின்றதே …?…
பார்த்தும் பாராமலே போகும் மேகங்களே
கண்ணை கண்ணை சிமிட்டும் நொடியில்
உன் உருவம் மறையும் மறையும்
அதனால் இமைகள் வேண்டாம் என்பேன்
ஆண் : பார்வை ஒன்றால் உனை அள்ளி
என் கண்ணின் சிறையில் அடைப்பேன்
அதில் நிரந்தரமாய் நீ இருக்க
இமைகள் வேண்டும் என்பேன்
பெண் : மேற்கு திசையை நோக்கி நடந்தால்
இரவு கொஞ்சம் சீக்கிரம் வருமா
ஆண் : தூங்கும் தேவை ஏதுமின்றி
கனவுகளும் கைகளில் விழுமா

பெண் : கேளாமல் கையிலே வந்தாயே.. காதலே
என் ராமன் நீயெனில் உன்கையில் நான் அணில்
ஆண் : கோகிலம்.. கோகிலம் … கோகிலம்
நெஞ்சிலே காதலின் கால்தடம்
பெண் : கோகிலம்.. கோகிலம் … கோகிலம்
நெஞ்சிலே காதலின் கால்தடம்



**************************
காதலன் : ஐ லவ் யூ
காதலி : நான் உன்ன லவ் பண்ணலன்னா?
காதலன்: இப்படியே பஸ் பிடிச்சு 'ஏகன்' படம் பாக்க போயிடுவேன்.
காதலி: எனக்காக எப்போ நீ உயிரவே கொடுக்க துணிஞ்சிட்டீயோ, இதுக்கு மேல என் லவ்வ மறைக்க விரும்பல. ஐ லவ் யூ டூ!


********************************

நிருபர்: நீங்க நடிச்ச ஏகன் படம் 100 நாள் ஓடனும்னு நாங்க வாழ்த்துறோம்

அஜித்: நோ..200 நாள் ஓடும்!

நிருபர்: ஹிஹி ஜோக் அடிக்குறீங்களா சார்

அஜித் : அடிங்க கொய்யால யாருடா முதல ஜோக் அடிச்சா?


****************************************
பாப்பைய்யா: அன்புத்தாய்மார்களே.. அருமை பெரியோர்களே... இனிய குழந்தைகளே.. காலை வணக்கம்.. போன நிகழ்ச்சிலே தம்பி விஜய்ய பார்த்தோம்.. அப்ப இந்த வாரம் யாருனு நான் சொல்ல வேணாம்லே.. விஜய்னா அடுத்து இவர் தானே.. வாங்க..



தல போல வருமா, தல போல வருமா, தல போல வருமா பாட்டு ஒலிக்க, ஒருவர் வேகமாக நடந்து வருகிறார்..


பாப்பைய்யா: யாருய்யா நீயு... விருந்தினர் வர நேரத்துல அவர் பாட்டுக்கு உள்ளார வந்துட்ட..


அஜித்: அண்ணே... என்ன நல்லா பாருங்கனே... நான் தான் அஜித்..


பாப்பைய்யா: ஓ.. கோட்-சூட் இல்லாம,வேட்டில வந்துட்டியா?? அதான் கண்டுபிடிக்க கஷ்டமாயிடிச்சி..


டீ.ஆரு: நீ போட்டு வந்ததோ வேட்டி.
சினிமாவில் உனக்கும் விஜய்க்கும் தான் போட்டி


பாப்பைய்யா: டீ.ஆரு.. நீ ரொம்ப தான்யா நாட்டி..(NAUGHTY) ஷோவே இப்ப தான் ஆரம்பிச்சிருக்கு.. அதுக்குள்ள முற்றும் போட வச்சிடுவ போல இருக்கே.. நிறுத்துய்யா..


கவுண்டரு: டேய்.. கூலிங்-க்ளாஸ் கண்ணா.. அது என்னடா நீ பெருசா சாதிசிட்ட மாதிரி தல போல வருமா? இவரு தான் அணு-விஞ்ஞானி... சந்திரனுக்கு ராக்கெட் விட்டாரு.. ஆனா மகனே.. மொக்க படமா நடிச்சி தள்றதுல உன்ன போல யாரும் வர முடியாது...


அஜித்: அண்ணே.. அந்த வில்லு நடிகரை மறந்துடீங்களா?


பாப்பைய்யா: அவரு படம்னா கூட பாட்டு, காமெடினு ஏதோ கொஞ்சம் பாக்குற மாதிரி இருக்குய்யா.. ஆனா உன் படத்துல பாட்டும் மொக்க.. உன் நடிப்பு தவிர வேற காமெடியே இல்லயே.. ஏன்யா??



டீ.ஆரு: சரி.. கடசியா உனக்கு ஹிட் ஆன படம் என்ன?


அஜித்: ஏகன் நீங்க பாக்கலையா??


கவுண்டரு: டேய் அதெல்லாம் படமாடா? உன் ஃபேன்ஸாலேயே பாக்க முடில.. என் மாப்பு சத்யராஜ் கூட்டிட்டு போனான்டா.. ஷோ முன்னாடி அடிச்ச குவார்ட்டர் போதையே போச்சு.. காமெடிங்கற பேருல நீ அடிச்ச அக்கப்போர் இருக்கே.. ராமா ராமா...



அஜித்: அண்ணே.. ஒப்பனிங் கலெக்‌ஷன் தெரியுமா?? என் பில்லா விட அதிகம்... அது..



பாப்பைய்யா: எதுய்யா?? உன் படம் ஒப்பனிங்லா நல்லா தான் இருக்கு.. ஃபினிசிங் சரியில்லையே.. முதல் வாரம் ஏதோ ஃபேன்ஸ் தயவாலே ஓடிச்சி.. அடுத்த வாரம் படம் படுத்துகிச்சி.. ஏதோ தல பாவமேனு, உன் ஃபேன்ஸே நெஞ்ச கல்லாக்கிட்டு, கஷ்டப்பட்டு போய் படம் பார்த்தாங்க...



டீ.ஆரு: நீ நடிச்சதோ ஏகன்.. அதுனால தியேட்டருல அடிச்சாங்க பேகான்..


கவுண்டரு: யோவ்.. யாருய்யா இவன உள்ள விட்டது.. இங்க நாம என்ன
பேசிட்டு இருக்கோம்.. இவன் என்ன பேசுறான்?? அடடடடடடடடடடடா..


அஜித்: ஹே ஃபூல்.. பீ கூல்.. (HEY FOOL, BE COOL)


கவுண்டரு: அட்ரா சக்க.... அட்ரா சக்க, அட்ரா சக்க, அட்ரா சக்க.


அஜித்: சரிண்ணே.. பில்லா படத்துல நான் நல்ல நடிச்சேன்ல?


பாப்பைய்யா: நீ நல்லா நடிச்சனு சொல்றத விட நல்லா நடந்தய்யா.. அப்டி இருந்தும் உன் தொப்பை குறையலையே... டான் கதையில புள்ளி மான் மாதிரி, அழகா ராம்ப் வாக் பண்ணிட்ட.. ஆனா உன்ன விட நயந்தாரா பிகினி சூப்பருலே.. அதுக்காகவே 2 வாட்டி பார்த்தேன்ல..



டீ.ஆரு: படம் ரிப்பீட் ஆடியன்ஸே அதுக்காக தான்ங்க... அவனவன் செலவு பண்ணி 2 நிமிசம் விளம்பரப்படம் எடுப்பானுங்க... ஆனா இரண்டரை மணிநேரம் கூலிங்க்ளாஸ்க்கும், கோட்-சூட்டுக்கும் விளம்பரமா எடுத்த படம் தான் பில்லா..



கவுண்டரு: ஹே.. ஓல்ட் மேன்.. நீ கரெக்டா சொன்ன.. அது கூட விட்டுடு.. சேவல் கொடி பறக்குதய்யா பாட்டுல எல்லாரும் மஞ்சள் துணி கட்டி ஆடிட்டு இருக்க, நீ மட்டும் சம்பந்தம் இல்லாம, ஜீன்ஸ்-பேண்ட், டீ-ஸர்ட்ல வந்த.. சரி.. பையன் ஆடுவானே நானும் முத வரில இருந்து பாக்குறேன்.. ம்ம்ம்ம்ம்..


அஜித்: அண்ணே.. பக்தி பரவசத்துல அப்டி வந்துட்டேன்னே... நான் தல.. அவ்வளவு பேருல நான் வித்தியாசமா தெரியணும்ல.. அதான்..


பாப்பைய்யா: நீ தான் டான்ஸே ஆட மாட்டேலே.. அதுல இருந்தே கண்டுபிடிச்சிடலாம் நீ தான் அஜித்னு.. பிறவு என்ன??


கவுண்டரு: டேய்.. என்ன அண்ணேனு கூப்டாத... ஏற்கனவே ஒரு அண்டா தலையன் என்ன அண்ணே அண்ணே கூப்டு ஏகப்பட்ட பிரச்சனைகள், ரோதனைகள், வேதனைகள் கொடுத்துட்டான்.. இப்ப புதுசா நீ வேறயா?? ஒடி போய்டு படுவா..



பாப்பைய்யா: அதே படத்துல செய் ஏதாவது செய்னு ஒரு சாங்க் இருக்கு.. அந்த பொண்ணு சிலுக்கு மாதிரி இல்லனாலும் மிலுக்கு மாதிரி இருந்தாலே.. அவ்வளவு உணர்ச்சியோட ஆடுறா... கழுத்துல சுளுக்கு வந்த மாதிரி இப்டி, அப்டி திருப்பிட்டு இருக்கய்யா... அப்றோம் முகத்துல வேற மலச்சிக்கல் வந்த மாதிரி ஒரு எக்ஸ்பிரஸ்ஸன்.. ஏன் தம்பி?? விளங்குமா??



டீ.ஆரு: ஆமாங்க.. இதுக்கு நானே ஆடி இருப்பேனே.. இதே மாதிரி கோட்-சூட் போட்டு, என்ன காதலிக்க ஓராயிரம் பேர் இருக்காங்கனு மும்தாஜ் கூட அட்டகாசமாக, காதல் ரசம் சொட்ட ஆடியவன் தான் இந்த டீ.அர்.


அஜித்: நீங்க ஆடுனா அது பேரு பில்லா இல்ல... பெ....


பாப்பைய்யா: வேணாம்யா... நீ அவர மாதிரி ரைமிங்கா சொல்றேனு ஒண்ணுகிடக்க சொல்ல, அவருக்கு கோவம் வந்து, தமிழன்யா.. அப்ரெஸ், டிப்ரெஸ்னு கத்திட்டு இருப்பாரு..



அஜித்: பெரிய குல்லா மாதிரி இருக்கும்னு சொல்ல வந்தேன்...

கவுண்டரு: இதே மாதிரி தான் ஓல்ட்-மேன், இவரு பரமசிவன்னு ஒரு படத்துல நடிச்சாரு.. அந்த கதையில அப்டி என்னத்த இவரு கண்டாரு தெரில. அதுல ஜெயில்ல ஒரு பாட்டு வரும்.. ஆச தோச.. அப்பள வடனு.. சம்பந்தமே இல்லாம உள்ள வந்து..


அஜித்: அண்ணே.. அது என் INTRODUCTION..


டீ.ஆரு: (விஜய் குரலில் மிமிக்ரி) ஹேஹேஹேஹே.. பேசிட்டு இருக்கோம்ல... சைலன்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. (SILENCE) SORRY FOR THE INTERRUPTION, DURING THE CROSS EXAMINATION, YOU CAN SEE THE ACTION COME DIRECTION, ADDED WITH PERFECTION, IN THE NAME OF WITNESS YOU ARE PLAYING WITH LIMITATIONS



பாப்பைய்யா: DON’T PLAY WITH EMOTIONS!! எங்களால முடிலய்யா.. ஷோ நல்லா தானே போய்கிட்டு இருக்கு.. உனக்கு டயலாக் வேணும்னா டைரக்டர் கிட்ட கேளுய்யா.. ஏன் இப்டி நடுவுல? கவுண்டரு நீ பேசுய்யா...



டீ.ஆரு: டேய் ஆப்பிரிக்கன் அங்கிள்.. இன்னொரு வாட்டி நடுவுல வந்த, அப்டியே அப்பி புடுவேன்.. ஆங் எங்க விட்டேன்.. சம்பந்தமே இல்லாம உள்ள வந்து, புள்ள குளிக்காம, பல்லு விளக்காம, அட முடி கூட வாராம, எழுந்து வந்து, நானும் ஆடுறேங்கற பேருல கரண்ட்-ஷாக் அடிச்ச மாதிரி குதிப்பான் பாருங்க.. நான் பயந்துட்டேன்.. கடசிலே அந்த பொண்ணுக்கு எச பாட்டு பாடுறேன்னு, ஆங் ஆஆங் ஆஆங்னு சாப்ட அப்பளம், வட செரிக்காம ஏப்பம் வுட்டுட்டு இருப்பான் பாருங்க.. பயங்கர கொடும...



பாப்பைய்யா: பாவம்யா.. அந்த பி.வாசு இவர சந்திரமுகிய வச்சி ஏமாத்திட்டாரு.. அஜித்து, எதுக்கு உன்னை எல்லாரும் தலன்னு சொல்றாங்க??


அஜித்: ஏற்றி விடவும் தந்தையும் இல்லை.. ஏந்தி கொள்ள தாய்மடி இல்லை.. என்னை நானே சிகரத்தில் வைத்தேன்... அதனால் உனக்கென்ன??



கவுண்டரு: டேய் ஜிம்பலக்கடி பம்பா.. எனக்கென்னவா?? அந்த பாட்ட கேட்டு வூட்டுக்கு போற வழியெல்லாம் எவனாவது எதாவது கேட்டா, உனக்கென்ன்னு கேட்டு தர்ம அடி வாங்குனது எனக்கு தான் தெரியும்.. இந்த ஆல்-இன்-ஆல் அழகுராஜா இதுவரைக்கும் அவன் பொண்ஜாதி கிட்ட அடியே வாங்குனதில்ல.. ஆனா (குமுறுகிறார்) அவ அன்னைக்கி நைட் ஏதோ கேக்க, நான் உன்னால உனக்கென்ன உனக்கென்னனு சொல்லி மொத்து மொத்துனு அடி வாங்கிட்டேன்டா ஜெல் தலையா (அழுகிறார்)



டீ.ஆரு: விடுங்க சார்.. இந்த வரி கூட தாங்கிக்கலாம்.. ஆனா சொன்னாரு பாரு இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன.. ஏழு கடலும் என் பெயர் சொன்னால் உனக்கென்னனு.. தம்பி.. கடல் பேசி நீ கேட்டுருக்கியா?? அது உஸ் உஸ்னு உயிருள்ள வரை உஷானு தான் சொல்லும், என்னை மாதிரி... உன் பேர சொல்லாது... இந்த உடம்ப வச்சிகிட்டு உன்னால இமயமல மேல நடந்து கொடி நட முடியுமா??


கவுண்டரு: டேய் தாடி.. உன் மொக்க தாங்காம இங்க தான் எல்லாரும் உஸ் உஸ்னு சொல்றாங்க.. நிறுத்துடா!!


பாப்பைய்யா: உடம்ப பத்தி யாரு பேசுறாங்கனு பாருங்க.. இது அடுக்குமா?? அவருக்கு வயித்துல தான் தொப்ப.. உமக்கு உடம்பெல்லாம் தொப்பய்யா...


டீ.ஆரு: (தீடீரென்று டென்சன் ஆகி, சட்டையை தூக்கி, வயிற்றை அடித்து) பாருங்க சார்.. அடுத்த படம் கருப்பனின் காதலிக்காக, வெயிட் குறைக்கிறேன்.. ஜிம்க்கு (GYM) போறேன்..


கவுண்டரு: (ஷாக்காகி) டேய் டேய் டேய் ஓவர்டா.. ஜிம்க்கு போயி ஸ்கிப்பிங் (SKIPPING) ஆடுறியா??


டீ.ஆரு: யார் சார் அந்த ஆமிரு, சூரியா?? சிக்ஸ்-பேக்கா?? (SIX PACK) நான் வைக்கிறேன் சார் ஏய்ட்-பேக்.. (EIGHT PACK) (வயித்த குத்தி) நம்பிக்கை வைங்க... வரான் சார் இந்த டீ.ஆரு.. யூத்தெல்லாம் நோ-மோரு..


கவுண்டரு: அய்யோ ராமா ராமா.. நம்ம ஊருக்கு நாய் புடிக்கற வண்டி மட்டும் வரட்டும்... உனக்கு இருக்கு அன்னைக்கு கச்சேரி...


பாப்பைய்யா: மக்களே.. நீங்களே பாருங்க.. நாங்க ஒரு ஷோ ஆரம்பிச்சி மத்தவங்கள கலாய்க்கலாம்னு இருந்தோம்... ஆனா இவரோ எங்களுக்கு வேல வைக்காம அவரே கலாய்ச்சிக்கிறாரு.. சூப்பருலே.. தம்பி அஜித்து.. நீங்க சாமியாரா ஒரு படத்துல நடிச்சீங்களே?? அது என்ன??



அஜித்: கடவுள்... நான் கடவுள்..


டீ.ஆரு: இப்ப எதுக்கு இந்த பன்ச்?? படமே ஒரு மொக்க.. நீ இத சீரியசா பேசியே ஊரு சிரிச்சது...


கவுண்டரு: உனக்கு மனசாட்சினு ஒண்ணு இருந்துருந்தா அந்த படத்துல நடிச்சிருப்பியா?? நெஞ்ச தொட்டு சொல்லு நீ கதை கேட்டேன்னு? ஏன்டா, ராமர் வேசம் போட்டுகிட்டு வந்தீயே.. வில்லன கொல பண்ண அம்பு, வில்லு யூஸ் பண்ணி இருந்தா கூடா சகிச்சிக்கலாம்.. ராமரு எந்த ஊருல துப்பாக்கிலா யூஸ் பண்ணி இருக்காரு?? இத மட்டும் பா.ஜ.க, ஹிந்துட்வா அமைப்புகள் பார்த்து இருந்தாங்க, மவனே நீ கைமா தான்..



பாப்பைய்யா: அந்த படம் பார்த்து அவங்க உயிரோட வந்தா தானேய்யா?? மொத பாதியிலே மர்கயா தான்..



அஜித்: வித்தியாசமா பண்ணலாம்னு நினச்சோம்.. அது இப்டி ஆகும்னு யாருக்கு தெரியும்??



டீ.ஆரு: வித்தியாசமா? உன்ன அந்த இரண்டு எழுத்து இயக்குனர் அவர் படத்துல இருந்து, சில பல கசமுசாக்கள் நடத்தி உன்ன தூக்குனதாலே தான் நீ அவருக்கு பல்ப் தரணும்னு அவசர அவசரமா நடிச்ச?? ALL-DETAILS I KNOW…



பாப்பைய்யா: ஆனா பல்ப் ஃபாக்டரியே (BULB FACTORY) வாங்குனது இவர் தானே?? அந்த படத்துல நீ நடிச்சிருந்தா, அரை மணி நேரம் தான் ஹீரோ வருவாருலே, அதுனால உன் ரசிகர்கள் அதெல்லாம் ஒத்துக்க மாட்டாங்க.. அப்றோம் தொப்பய வச்சிகிட்டு உம்மால யோகாசனம்லா பண்ண முடியுமா?? ’தல’ கீழா நின்னா, தொப்ப சும்மா அதிரும்லே...



அஜித்: ஹே... நான் கீழ இருந்தாலும், இறங்கி போறவன் இல்ல, ஏறி போறவன்..



கவுண்டரு: மகனே.. நீ இன்னொரு வாட்டி பன்ச் சொல்றேன்னு மொக்க போட்ட, உன்ன மேடைல இருந்து கீழே இறக்கிடுவோம்... அப்றோம் எல்லாரும் உன்மேல ஏறிப்போவோம்.. பீ கேர்ஃபுல்.. (BE CAREFUL)



டீ.ஆரு: நல்ல வேள.. வில்லன் படத்துல கிரண் கூட இவர சட்டையோட ஆட விட்டாங்க.. இல்லனா இவர் தொப்ப பெருசா இல்ல கிரண் தொப்ப பெருசான்னு போட்டி வைக்கலாம்..



அஜித்: ஹே.. ஓவரா கலாய்க்காதீங்க.. நான் தனி ஆள் இல்ல..



டீ.ஆரு: உன் வெயிட்ட பார்த்தாலே தெரியுதே, நீ தனி ஆளு இல்லனு.. அதான் உன் ஃபேன்ஸ் தல எப்பவுமே வெயிட்டுன்னு சொல்றாங்களா??


அஜித்: 690 உயிர்களின் ஆன்மா நான்...


பாப்பைய்யா: யாருய்யா அவங்க?? உன் படம் பார்த்து செத்துபோனவங்களா?


அஜித்: இந்த மழை நிக்கறதுக்குள்ள நீங்க பேசுறத நிறுத்தணும்..


கவுண்டரு: டேய்.. மொத கூலிங்-க்ளாஸ கிழத்து.. வெளிய வெயில் மண்டைய பொளக்குது... ஏன்டா, எந்த சிட்டுவேஷன்ல (SITUATION) எந்த பன்ச் சொல்லணும்னு வெவஸ்த இல்லையா உனக்கு??


அஜித்: ஹே.. அத்திப்பட்டி, தெரியுமா??


கவுண்டரு: ஐயோ... ஏற்கனவே ஒருத்தன்கிட்ட நான் வட்டிப்பட்டி கேக்க போயி, அவன் குடும்பமே பிரிஞ்சி போயி, என்ன அக்கு வேறா, ஆணி வேறா பிரிச்சிட்டான்.. இதுல இப்ப அத்திப்பட்டி வேறயா?? ஆள வுட்றா சாமீ...



அஜித்: உங்களுடைய மாமன், மைத்துனன், தாய், தந்தை....



பாப்பைய்யா: அய்யா.. போதும்.. எங்களால முடில.. இத்தோட முடிச்சிக்கலாம்.. இல்ல நீ பேசுவேன்னு அடம்பிடிச்சா உன் உச்சரிப்ப கேட்டு இங்க இருக்குறவங்களே ஓடிடுவாங்க.. பராசக்தி சிவாஜி பட சி.டி இருந்தா, தம்பிக்கு தாங்க.. அத பார்த்தாவது இனிமேல் இப்டி முயற்சி செய்ய மாட்டாரு... தம்பி இப்டி வசனம் பேசுறத விட்டுட்டு, நல்ல கதைகள கேட்டு நடிங்க.. ராஜூ சுந்தரம், செல்லா, சரவண சுப்பையா இவங்க நட்ப துண்டிங்க.. அப்ப தான் நீங்க தல.. இல்லனா எல்லாரும் தருதல தான் சொல்வாங்க..



அஜித்: பெண் கொடுத்தோர், பெண் எடுத்தோர், மகன், மகள், சுற்றம்...



பாப்பைய்யா: இவரு நிறுத்த மாட்டாரு போல... எண்ட்-கார்ட்ட (END-CARD) போடுங்க.. போட்டாச்சா?? பிறவு சந்திப்போமா??? நன்றி!!
அஜித் : இது கதை அல்ல கருப்பு சரித்திரம் .

நீதிபதி : ஷப்பா ஆரம்பிச்சிட்டான்டா

அஜித் : என்ன sir நீங்களே இப்படி சொல்லலாமா ?

நீதிபதி : சொல்லவந்ததை சொல்லு ...அதவிட்டிட்டு தேவை இல்லாம dialog எல்லாம் பேசாத .

அஜித் : சரி கோபபடாதீங்க சொல்லுறன்...............................(அழுதுகொண்டே சொல்கிறார் ) அத்திபட்டி இன்னு ஒரு ஊர் இருந்திச்சு தெரியுமா உங்களுக்கு ?

நீதிபதி : எருமநாயக்கன்பட்டி இன்னு ஒரு ஊர் இருந்திச்சே தெரியுமா உனக்கு ?

அஜித் : தெரியாது !......

நீதிபதி : அதுக்கு இது சரியாபோச்சு .இதெல்லாம் ஒரு
கேள்வியாடா ? என்டா என் உயிரை வாங்குறா.. அந்த மூன்று பேரையும் ஏன் கடத்தினாய் அத முதலில சொல்லு .

அஜித் : அவங்க மூணுபேரும் என்ன பாத்து ஒம்பது இன்னு சொல்லீண்டாங்க .........

நீதிபதி: அவங்கள் உண்மையை தானே சொன்னாங்க ...........அது சரி அவங்கள எங்க வைச்சிருக்க .........? என்ன பண்ணினாய் ?..

அஜித் : அவங்கள ஒரு அறையில அடைச்சு வைச்சு என் படம் எல்லாத்தையும் போடுகாட்டீட்டன்

நீதிபதி : அட பாவி அதுக்கு அவங்கள தூக்கில
போட்டிருக்கலாம் ........

அஜித் : அது ......

நீதிபதி : நீ செய்த குற்றங்களுக்காக உன்னை நான் முப்பது வருடம் சிறை தண்டனையுடன் ... ராஜேந்தர் படம் , சிம்பு படம் திரும்ப திரும்ப போடுகாட்டும் படி தீர்பளிக்கிறேன் ..........
பெப்ஸி விளம்பரத்தில் David Beckham (million pound) ஒப்பந்தம்...
கொக்க கோலா விளம்பரத்தில் விஜய்...

......................................

"என் மகன் ஆதரவு
யாருக்கும் இல்லை" விஜய்
தந்தை பேச்சு...
ஜெயலலிதா விட்டார் பெருமூச்சு...

இலை சின்னத்தில் தல...(இரு வாரம் முதல் வந்த குங்குமம்/குமுதம் பார்க்க)

..............................................

புல்லட் போட்டு சுட்டா அது GUN
ஹிந்தியிலிருந்து சுட்டா அது ஏ"GUN" (ஏகன்-சுட்டதுதான் சுட்டீங்க...வெந்து போற அளவுக்கா சுடுறது)...

............................................

சேவை மனப்பான்மை இளைஞர்களிடத்தில் ஏற்றம்
விஜய்க்கு டாக்டர் பட்டம்...

.....................................

காதலிக்கு சோப்பு போடுபவன்
காதலன்..
அவள் அம்மாவுக்கும்
சோப்பு போடுபவன் காதல் மன்னன் (அஜித்-1998)...

....................................

சங்கம் வைத்து
தமிழ் வளர்த்தான் அன்றைய Citizen (குடிமகன்)

தமிழ் சினிமாவை வைத்து
தொப்பைய வளர்க்கிறான் இந்த Citizen (அஜித்-2001)
A.A.A.A : ஏகன் படம் தோல்வி படம் என்று சொல்லப்படுகிறதே...?

அஜித் : அது ஒரு தோல்வி படம் அல்ல...அது...

A.A.A.A : (கேட்கிறவன் கேனயன்னா ஏகன் படம் ஏழு ஓஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டதின்னு ஏகத்துக்கு அடிச்சு விடுவீங்களே...)......ஆனாலும் உங்கள் ரசிகர்களே அதை ஒத்துகொண்டிருக்கிறார்களே...?

அஜித் : அது ஒரு வெற்றிப்படமில்லாவிட்டாலும் தோல்வி படமல்ல...அது..

A.A.A.A : (தோல்வி படங்களுக்கு இப்பிடி ஒரு விளக்கம் கொடுக்கிறதே உங்களுக்கெல்லாம் வேலையா போச்சு...)...அது எப்பிடி ஒரு படம் வெற்றி, தோல்வி இரண்டாகவும் இருக்க முடியும்...?


அஜித் : கிட்லராக வாழ்வது கொடிது...புத்தனாக வாழ்வதும் கடிது
கிட்லர், புத்தன் இரண்டுமாய் நான் இருந்தால் உனக்கு என்ன...தம்பி
உனக்கு என்ன...உனக்கு என்ன...

A.A.A.A : புரியலையே...

அஜித் : தோல்வி படம் கொடுப்பது கொடிது... வெற்றி படம் கொடுப்பது கடிது
வெற்றி தோல்வி இரண்டையும் கொடுத்தால் உனக்கு என்ன...தம்பி
உனக்கு என்ன...

A.A.A.A : (அடப்பாவி...அட்டகாசம் பட பாட்ட எதோட connection பண்றான் பாரு...!)….

புரிஞ்சுபோச்சு...தமிழ் சினிமாவில் உங்களால் மட்டும்தான் இரண்டாவும் இருக்கமுடியும்...

அஜித் : இப்பதான் நீ என்னை நல்லா புரிஞ்சுகிட்டா...அது...

A.A.A.A : ஆமா sir…அது எப்பிடின்டா.........................

பத்து பத்து பத்து பத்து...பத்துக்குள்ள ஒன்ன வெட்டு...
எட்டு எட்டு எட்டு எட்டு...எட்டு கூட ஒன்ன கூட்டு...

இப்ப சொல்லுங்க...உங்களா மட்டும்தான இரண்டாவும் இருக்கமுடியும்...
அஜித் இயக்குனர் சரனுடன்(சரனுக்கு சனி உச்சத்தில் போல...) கதை(அப்படின்னா?) விவாதத்தில் இருக்கிறார்...)

அஜித் : சரன்-ஜி நல்ல ஒரு remake கதை இருந்தா சொல்லுங்க...

சரன் : (அது என்ன remake கதை...சுட்ட கதைனு சுத்த தமிழ்ல சொல்லமாட்டீங்களோ...?விஜய் கூட பரவாயில்ல தெலுங்கிலயிருந்துதான் remake பண்ணுறான்...நீ என்னடா தமிழ் படத்தையே சுடுறா...)
உங்களுக்கு சுட்ட கதைதான வேணும்...பாட்டி வடை சுட்ட கதை okவா...?

அஜித் : என்னை வச்சு காமெடி கீமெடி ஏதும் பண்ணலயே...

சரன் : (உங்கள வச்சு என்ன பண்ணினாலும் அது காமெடியாத்தான் இருக்கும்...)
சாச்...சா...நாங்க பாட்டி வடை சுட்ட கதைய சுடப்போறம்...

அஜித் : அப்ப இதில் பாட்டி வடைக்குப் பதிலா pizza...burgerனு சுட்டா styleishஆ இருக்கும்ல...

சரன் : (அடே...நீ பில்லா படத்துக்கப்புறம் செய்யுறது இரண்டே விஷயம்தான்... ஒன்னு எப்ப பார்த்தாலும் கோட் ஷுட்டோட அலையிறது...மற்றது எதுக்கெடுத்தாலும் இந்த styleish என்ட வார்த்தைய சொல்றது...இதை மாத்த மாட்டாயாடா நீ...?)
இதில வாற பாட்டி பல்லுப்போன பாட்டி இல்ல...வைரக்கல் பார்ட்டி...அவன் ஒரு வைரக்கல்ல சுடுரான்...

அஜித் : அப்ப பாட்டி கரட்டரில் வில்லன்...காக்கா கரட்டரில் நானா...? விஜய்க்கு குருவி...அப்ப எனக்குக் காக்காவா? நீங்களும் ஏன் எனக்கு ஆப்பு அடிக்கிறீங்க ஜி...?

சரன் : இதில் main வில்லன்தான் காக்கா...நீங்க நரி...பார்ட்டி சுட்ட வைரத்த main வில்லன் சுட்டுட்டு வெளிநாடு தப்பிப் போறான்...அவன பிடிக்க நீங்க வெளிநாடு போறீங்க...

அஜித் : ஓ...அப்ப நானும் குருவி விஜய் மாதிரி பறந்தே வெளிநாடு போறனா...?

சரன் : (டே...இது உனக்கே overறா இல்ல...?
விஜய்க்காவது slim body...அதுக்கே இவ்வளவு விமர்சனம்...
உன்னோட தொப்பை sizeக்கும் புவி ஈர்ப்பு விசைக்கும் கணக்குப்போட்டு பார்த்தால்... தாங்காதடா சாமி...டே...டே இந்த படத்தையும் காமெடி படமாக்கப்போறியா...?)
அவன பிடிக்க நீங்க flightல வெளிநாடு போறீங்க...
இதிலதான் interval...

(interval எதுக்குன்னா...இவ்வளவு நேரம் படம் பார்த்து கடுப்பாகியதுக்கும்...இனி பார்த்து கடுப்பாக தயாராகிறதுக்கும்...)
இனித்தான் உங்களின் ராச்சியம் ஆரம்பம்...இனி நீங்க நடிக்கப்போவது பெண் வேடத்தில்...(நடிக்கவே தேவையில்லயே...அப்படியே இருந்தாலே போதுமே...)

அஜித் : action படம்ன்னு நினைத்தேன்...இப்படி காமெடி பண்ணுறீங்களே ஜி...

சரன் : இல்ல...இதில உங்களுக்கு நரி கரட்டரா...அதுதான் தந்திரமா வில்லன வீழ்த்துறீங்க...பெண் வேடம்ன்னதால நீங்க தொப்பைய குறைக்கனும்...
கஸ்டம்தான்...இருந்தாலும் கொஞ்சம் try பண்ணுங்க...தொப்பைய குறைக்காட்டா pregnant lady மாதிரி இருக்கும் ஆமா சொல்லிட்டன்...

அஜித் : ok ஜி...அப்புறம் படத்தில் ஏதாவது punch dialog இருக்கா...?

சரன் : ஆமா......நாங்க அடிக்கிற ஆப்பு ரொம்ப ரொம்ப sharp-pu...

அஜித் : இதை எங்கேயோ கேட்டமாதிரி இருக்கே...?

000 : தெரியுதில்ல...பொம்பளை வேடம் போட்டாலும் உங்களுக்கு குஞ்சு (சத்தியமா double meaningல ஒண்ணும் சொல்லல என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்......நம்புங்க) dialog வேணும் punch dialog வேணும்...

அஜித் : இல்ல எனக்கு வேணும்(அடம்பிடிக்கிறானே)...வேணும்னா என்னோட பழைய punch dialogக remake பண்னுவமா...?

000 : அடப்பாவி...punch dialogயும் remake பண்ணுற அளவுக்கு பஞ்சம் வந்திட்டா...? எந்த dialog அப்பு...?

அஜித் : நான் தனி ஆள் இல்ல...

000 : super...இதை இப்பிடி மாத்துவம்...நான் single ஆள் இல்ல...double ஆள்...வெளியதான் பொண்ணு...உள்ள gunனு...( எதை சொல்றீங்க...?)

இனி climax...(அப்பாடி...ஒரு முடிவுக்கு வந்தாச்சு...அஜித் படம் இனி பார்க்குறதில்லை என்ட முடிவுக்கில்லைங்க...படத்தோட முடிவுக்கு...)


அஜித் : climaxஐ நான் சொல்றன்...வில்லன் என்ன பார்த்து நீ ஒரு பெண்ணான்னு கேட்கிறான்...அதுக்கு நான்...ஆடத்தெரியலன்னா ஆடிக்காட்டலாம்...பாடத்தெரியலன்னா பாடிக்காட்டலாம்...பெண்ணான்னு கேட்டா...பாடிதான் காட்டனும்...

(நான் வரலாறு பட கரட்டரதான்டா சுட்டன்...நீ dialog முதல் கொண்டு சுடுறியேடா...)
அடப்பாவி...அப்ப பெண் குரல்ல பாடப்போறியா...பாடித்தான் இவ்வளவு நாளா கொல்லல...அதையும் இனி செய்யலாம்னு முடிவு பண்ணிட்டியா...

அஜித் : பாட்டு பாடிக்காட்டல...பாடிய(body) காட்டப்போறன்...

சரன் : (எப்படியாவது கொல்லுறதின்னு முடிவு பண்ணிட்டா...)
அப்ப என்னோட படத்துக்கு "A" சான்றிதல் வாங்கி தாறதா முடிவு பண்ணிட்டீங்களா...?

அஜித் : இந்த படத்திலயாவது என்னோட பாடிய(body) காட்ட விடுங்க...
வில்லன் மனம் திறந்து செய்த தவறை ஒப்புக்கொண்டு வைரத்த என்னிடம் ஒப்படைக்கிறான்...

சரன் : நீங்க இப்படி திறந்த மேனியா நின்னா மனம் திறக்க மாட்டான்...உயிரைத்தான் திறப்பான்...climax வித்தியாசமா இருக்கும்...தமிழ் சினிமாவிலயே இப்பிடி ஒரு climax வந்ததில்ல...வரலாறு படத்த விட ஒரு படி மேல போய் வரலாறு காணாத வெற்றி அடையும்...

அஜித் : இப்படித்தான் கதை சொல்லும்போது சொல்லுறாங்க...ஆனா படம் வந்தா முதல் நாளோட சரி...அப்புறம் ஈ...காக்கா கூட தியட்டர் பக்கம் வாறதில்ல...ஜி......
என்ன ஜி...படத்துக்கு பெயர் இன்னும் சொல்லலயே...?

சரன் : (அது ஒன்னுதான் இப்ப இல்லாத குறை...)நீங்க நரி கரட்டரில் அசத்தலா(9-நவரசம்) நடிக்கிறதால படத்தோட பெயர் ...நசல்...

[இந்த படம் எப்ப release செய்யலாம்னு ஜோசியரிடம் கேட்ட போது அடுத்த சித்திரை புத்தாண்டுக்கு release செய்யலாம்ன்னு சொன்னாரு...அப்ப இந்த ஆண்டு மட்டுமல்ல அடுத்த ஆண்டும் தமிழனுக்கு விரோதி ஆண்டுதான்...]

[விட்டிடுவமா... அதுக்கடுத்த சித்திரை புத்தாண்டுக்கு நசல் 2011ன்னு இதையே remake பண்ணுவம்...அதுக்கடுத்த சித்திரை புத்தாண்டுக்கு நசல் 2011 part-2ன்னு மறுபடியும் remake பண்ணுவம்...

அடப்பாவிங்களா...தமிழ் சினிமா பாவம்டா...விட்டிடுங்கடா...டேய்...டேய்...]

ரெண்டு' படத்தில் நடித்த போது, மாதவனை பற்றி கேட்டால், "நோ கமென்ட்ஸ்' என்று சொன்ன அனுஷ்கா, இப்போது, "வேட்டைக்காரன்' படத்தில், விஜயுடன் நடித்த அனுபவத்தை, வண்டி வண்டியாக கொட்டுகிறார். குறிப்பாக, "விஜய் சிறப்பாக நடனமாடக் கூடியவர்; ஜனரஞ்சகமாக நடிக்கக் கூடியவர். இதற்கெல்லாம் மேலாக, நடிகைகளை மதிக்கக் கூடியவர்' என்று, விஜய் மீது, ஐஸ் மலைகளை உருட்டி போட்டு வருகிறார்.






அரசியலுக்கு வருவதற்கான அத்தனை ஆயத்தங்களையும் திட்டமிட்டு நிறைவேற்றி வருகின்றார் நடிகர் விஜய் என்பதே சினிமா வட்டாரத்தின் சிறப்புச் செய்தி. அவரது அடுத்த கட்டப் படம் பற்றி யோசிப்பதிலும் பார்க்க அரசியல் நோக்கி அதிக கவனம் எடுக்கின்றாரோ என எண்ணும் வகையில் அரசியலின் பக்கம் அடிமேல் அடிவைத்து நகர்கின்றார் விஜய். அதை வெளிப்படையாகவே ஒத்துக்கொளவும் செய்கின்றார்.

அவரை இவ்வளவு தெளிவாகத் திட்டமிட்டு, அரசியலின் பக்கம் நகர்த்துவது அவரது தந்தை எஸ்.ஏ சந்திரசேகர். கடந்த ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் விஜய் மக்கள் இயக்கம் எனும் அமைப்புத் தொடங்கி வைக்கப்பட்டது.

இதன் தொடக்க விழாவில், தலைமை வகித்து உரையாற்றும் பேர்து,சந்திரசேகர் அதனை வெளிப்படையாகவே குறிப்பிட்டார். "அநியாயங்களை தட்டி கேட்கும் கதைகளைக் கொண்ட , பல புரட்சி படங்களை தயாரித்தவன் நான். இதற்காக என்னை யாரும் பாராட்டியதும் இல்லை, நாட்டில் ஏதும் மாற்றங்கள் நிகழ்ந்ததும் இல்லை. இந்தக் குறை என் மனதில் எழுச்சியாக இருந்தது. அதனால் என் மகனை நடிக்க வைத்து அதன் மூலம் எழுச்சியை கொண்டு வரலாம் என எண்ணினேன், நம்பினேன். அந்த நம்பிக்கையின் தோற்றமும் வளர்ச்சியும்தான் இன்று மக்கள் இயக்கமாக மாறி உள்ளது." என்றார்.

இவ்விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய இளைய தளபதி விஜய், பேசுகையில்,"நான் வேறு இரசிகர்களாகிய நீங்கள் வேறு அல்ல. என்னிடமுள்ள சமூக சிந்தனை ரசிகர்களாகிய உங்களிடம் உள்ளது. உங்களிடம் உள்ள சமூக கண்ணோட்டம் என்னிடமும் உள்ளது. இதனடிப்படையில், நீங்கள் செய்யும் ஒவ்வொரு நல்ல காரியங்களாலும், எனக்கும் நல்ல பெயர் வாங்கி கொடுக்கிறீர்கள். அப்படிப்பட்ட உங்களின் வேண்டுகோளை ஏற்று தான் இந்த இயக்கத்தை ஆரம்பித்து உள்ளேன். உங்கள் ஆர்வத்தில் பிறந்துள்ள இந்த இயக்கத்தை தலைமை ஏற்று நடத்த ஆர்வமாக உள்ளது. நான் பிறந்த மண்ணிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என ஆசைப்படும் உங்களுக்கு, தலைவராக இருந்து பாடுபடுவேன்." என்றார்.

அவர் மேலும் பேசுகையில், " இது அரசியல் இயக்கமா எனக் கேட்கின்றார்கள் அரசியல் என்பது சினிமா கதை போன்றது அல்ல என்பதை நான் நன்கறிவேன். சினிமா ஒரு சிறிய வட்டம். ஆனால் அரசியல்அப்படியல்ல. அது ஒரு பெருங் கடல். அதில் இறங்கி நீந்துவதற்கு முன் அதன் ஆழம் தெரிவது அவசியம்.
தற்போது பல அரசியற் தலைவர்களின் புத்தகங்களை படித்து வருகிறேன், இன்னமும் படிக்க வேண்டும் எனும் ஆவலிலும் உள்ளேன். ஒவ்வொரு மாவட்டத்திலும், இந்த இயக்கத்தின் உறுப்பினர்கள், இலட்சம் ஆக முர்றும் போது, இந்த இயக்கம் அரசியற்கட்சியாக மாறும். அதற்கான காலம் எதுவென்று எனக்குத் தெரியாது. நீங்கள் மனது வைத்தால், அது விரைவில் நடக்கும் என்பது உண்மை. அப்போது, என் குடும்பம் என் தொழிலை விட இந்த கட்சியை பெரிதாக எண்ணி உழைப்பேன் என்பதை உறுதிபடத் தெரிவிக்கின்றேன்" என்றார்.

விழாவில் பல்வேறு பொதுப்பணித்திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. மேலும் பலருக்கு வேண்டிய பல் வேறு உதவிகள் வழங்கப்பட்டன.





நல்லவேளை... படப்பிடிப்பு முடிந்து அங்கிருந்து வெளியேறிய பின் நடந்தது. இல்லையென்றால்?” விஜய் ரசிகர்களை அதிர்ச்சியோடு இப்படி முணுமுணுக்க வைத்திருக்கிறது அந்த தீ விபத்து. ஏ.வி.எம் ஸ்டுடியோவின் 7-வது தளம் முற்றிலும் எரிந்து நாசமாகிவிட்டது. தீ விபத்து ஏற்படுவதற்கு சற்று நேரத்திற்கு முன்பு வரை அங்குதான் இருந்தார் விஜய்.

வேட்டைக்காரன் படப்பிடிப்பு ஏ.வி.எம். ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. ஏழாவது தளத்தில் பாடல் காட்சிக்காக பெரும் செலவில் செட்டும் போடப்பட்டிருந்ததாம். அதிகாலை மூன்று மணி வரை அங்கே இருந்து நடித்துக் கொடுத்துவிட்டு கிளம்பினாராம் விஜய். பின்பு படம் சம்பந்தப்பட்ட அனைவரும் சிறிது நேரத்தில் அங்கிருந்து கிளம்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறிது நேரத்தில் அங்கே தீ பற்றிக் கொண்டதாம்.


பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை போராடி அணைத்திருக்கிறது. சுமார் மூன்று கோடிக்கும் மேற்பட்ட பொருட்கள் நாசமாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. படப்பிடிப்பு மேலும் தொடர வேண்டியிருப்பதால், மீண்டும் அதே போன்ற செட்டை போடுகிற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது வேட்டைக்காரன் படக்குழு.
Blog Widget by LinkWithin